நிட்சய தாம்பூலம்

நம்மை பெற்றவர்கள் நிட்சய தாம்பூலம் மாற்ற தயாராக இல்லை போலிருக்கிறது

நீயும் நானும் வெற்றிலை போட்டுக் கொண்டு மாற்றிவிடலாம் வா...


இப்போது நீ எனக்கு அம்மாவாகவும், தோழியாகவும், பாட்டியாகவும் இருக்கிறாய்.. திருமணத்திற்குப் பின் மனைவியாவேன் என்கிறாய்... எப்போது காதலியாவாய்..? - உறுதிமொழியாக
உன் திருவாயால் ஒரு முத்தம் தருவாயா?


A Wife is like a knife...
It kills life...
If its in the hands of a thief
It saves life..
If its with a Doctor's chief
அடுக்ககத்தில் தேன்கூடு

"நீ என் அம்மாவா? தோழியா? பாட்டியா..?" என்று மெல்ல உன்னைச் சீண்ட தொடங்கினேன்.."எல்லாமும்" என்றாய் அலட்டிக் கொள்ளாமல்.."பொண்டாட்டி...? ""கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டி தானே டா..." என்றாய்...அப்போ காதலி?எப்பவும் காதலி தான்...உறுதிப்படுத்த உன் திருவாயால்...உறுதியான ஒரு முத்தம் தருவாயா...."ஆரம்பிச்சிட்டியா?" .. என்று விலக முயன்ற உன்னை இழுத்து உன் கண்களில் சொன்னேன்"நீ தான் எனக்கு எல்லாமும்"

எங்கள் வீடு அடுக்ககத்தில் தேன்கூடு.

நிழல்
எல்லா மரங்களையும் வெட்டிக் களைப்படைந்த மரவெட்டிக்கு

நிழல் தந்தது... கிளம்பப் போகும் லாரி.