என் சக மனிதர்களுக்கு கொடுத்தேன்
என் நண்பர்களுக்குக் கொடுத்தேன்
என் மனைவிக்கும் கொடுப்பேன்
என்றும் தீராது..
என் அன்னை எனக்கு கற்றுக் கொடுத்த அன்பு..
தீராத அன்பை எனக்குக் கொடுத்து, எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னாள் என்றும் மாறாத நற்பண்பை விடுத்து எனக்கு வேறென்ன கற்றுத் தந்தாள்.. பள்ளியில் தேறாத என் நண்பனையும் நம்பிக்கை ஊட்டி வளர்த்தாள்..
பழகும் அனைவரிடமும் கொடுக்கிறேன்..
எப்போதும் குறைந்ததில்லை என் அன்னை தந்த அன்பு..
அனைவருக்கும் கொடுத்தாலும் தீராது..
என அன்னை எனக்களித்த அன்பு.
எந்தக் கோஷ்டியும் இல்லை.. நான் நாத்திகன் என்றேன்..
ஓ.. நீ அந்த கோஷ்டியா..? என்கிறான் நண்பன்
எங்க ஏரியா உங்க ஏரியா
எங்க ஊரு உங்க ஊரு
என் ஜாதி உன் ஜாதி
என் மதம் உன் மதம்
என் இனம் உன் இனம் aam
ஆம்..வேற்றுமையில் மட்டுமே ..
இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது
எங்கள் வீடு அடுக்ககத்தில் தேன்கூடு.
நிழல்
எல்லா மரங்களையும் வெட்டிக் களைப்படைந்த மரவெட்டிக்கு
நிழல் தந்தது... கிளம்பப் போகும் லாரி.
First Platform. Blogger Template created by Deluxe Templates
CSS Template by Breezy / Support by Dante Araujo